மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஆரம்பத்தில் வருடம் ஒரு படம் என்று இயக்கி வந்த மணிரத்னம், பின்னர் மெகா படங்களை இயக்கத் தொடங்கியபோது ஒரு படத்திற்கு இரண்டு ஆண்டுகள்கூட எடுத்துக்கொண்டார். பின்னர், ஆயுத எழுத்து படத்திற்கு பிறகு 3 ஆண்டுகளுக்கு பிறகு குரு படத்தை வெளியிட்டவர், அதையடுத்து 3 ஆண்டுகள் கழித்து அதாவது 2010ல் ராவணன் படத்தை இயக்கினார்.
அதன்பிறகு 3 ஆண்டுகள் கழித்து 2013ல் கடல் படத்தை இயக்கி வெளியிட்டார். ஆனால் அப்படி அவர் காலஅவகாசம் எடுத்துக்கொண்டபோதும் இந்த படங்களெல்லாமே மணிரத்னத்திற்கு தோல்வியாகத்தான் அமைந்தன. அதனால்தான் தற்போது அவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சில முன்னணி நடிகர்கள்கூட பின்வாங்கி விட்டனர்.
இந்த நிலையில, தற்போது புதிய படத்தை துல்கர்சல்மானை நாயகனாக வைத்து வருகிற 6-ந்தேதியில் இருந்து படப்பிடிப்பு நடத்துகிறார் மணிரத்னம். இப்படத்தில் நாயகியாக முதலில் ஸ்ருதிஹாசன், அலியாபட் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. பின்னர் நித்யாமேனன் நடிப்பதாக சொன்னார்கள். இப்போது பூ, மரியான் படங்களில் நடித்த பார்வதி மேனன் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஆனால் மணிரத்னம் தரப்பில் இருந்து துல்கர்சல்மானின் பெயர் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கதாநாயகி பற்றிய தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.