தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெண்கள் ஜீன்ஸ் அணிவது, இந்திய கலாசாரத்திற்கு எதிரானது என பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் கூறி உள்ள கருத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவனந்தபுரத்தில், தூய்மை இந்தியா திட்டத்தை ஜேசுதாஸ் துவக்கி வைத்தார். பின்னர் அவ்விழாவில் பேசிய அவர், பெண்கள் ஜீன்ஸ் அணிவதன் மூலம் மற்றவர்களுக்கு தொல்லை ஏற்படுத்த கூடாது; எதை மறைக்க வேண்டுமோ அதை மறைத்தே ஆடை அணிய வேண்டும்; அது தான் இந்திய கலாச்சாரத்தின் அழகு; அதற்கு மாறாக பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது; எளிமையும், அடக்கமுமே பெண்களின் மதிப்பு என கருத்து தெரிவித்தார். இது பெரும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
ஜேசுதாசின் இந்த கருத்திற்கு மகிலா காங்கிரஸ் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மகிலா காங்கிரஸ் தலைவர் பிந்து கிருஷ்ணா கூறுகையில், இது ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து. இது பெண்களின் சுதந்திரத்திற்கு எதிரான கருத்தாகவே பார்க்க முடிகிறது. ஜேசுதாஸ் மிகப் பெரிய பாடகர். இசை உலகிற்கு அவர் அளித்துள்ள பங்களிப்பை நினைத்து இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்கிறார்கள். அத்தகைய மாபெரும் இசை மேதை பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்.