தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்தவேளை, உற்சாகம் படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் நட்பதிகாரம் 79. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்த ராஜ் பரத், வல்லினம் படத்தில் நடித்த அம்ஜத்கான் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். ரேஷ்மி, தேஜஸ்வி ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இந்த படம் ரவிசந்திரன் இயக்கிய கண்ணெதிரே தோன்றினாள் படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் கூறியதாவது: கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் நட்பையும், காதலையும் சொல்லியிருந்தேன். நட்பதிகாரத்தில் நட்பையும், காதலையும் உள்ளடக்கி இரு குடும்பங்களுக்கான உறவை பதிவு செய்திருக்கிறேன். மற்றபடி கண்ணெதிரே தோன்றினாள் கதைக்கும், இதற்கும் தொடர்பில்லை. இரண்டாம் பாகமும் இல்லை.
மஜ்னு படத்தில் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை அறிமுகப்படுத்தினேன். இந்தப் படத்தில் தீபக் நிலம்பூரை அறிமுகப்படுத்துகிறேன். அவர்போலவே இவரும் புகழ்பெறுவார். மைசூர், பெங்களூர் பகுதியில் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறேன். என்றார் ரவிச்சந்திரன்.