'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
1998ல் இருந்து அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றியவர் பார்த்தி. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது அவரது சின்ன வயது கனவாம். அதனால் நாசாவில் இருந்து வந்து விட்ட அவர், விஞ்ஞானி என்ற படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் மீராஜாஸ்மின் நாயகியாக நடிக்க, தலைவாசல் விஜய் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறாராம். மேலும், இரண்டு ஹீரோயின்களும் இருக்கிறார்களாம்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை 5 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. அப்போது விஞ்ஞானி பார்த்தி பேசும்போது, நாசாவில் விஞ்ஞானியாக இருந்ததில் எனக்கு புல் பீல் கிடைக்கவில்லை. அதனால் சின்ன வயசு கனவை நிறைவேற்றுவதற்காக சினிமாவுக்கு வந்தேன். நான் உருவாக்கிய ஒரு கதையை சிலருடன் இணைந்து ஸ்கிரிப்டாக்கினேன். அதையடுத்து அவர்களின் உறுதுணையுடன் இந்த படத்தை இயக்கி, நானே ஹீரோவாகவும் நடித்திருக்கிறேன்.
இந்த படத்தில் மீராஜாஸ்மின் ஹீரோயினாக நடித்திருக்கிறார். துடுக்குத்தனமான ஒரு தமிழ் டீச்சராக அவர் நடித்துள்ளார். அவருக்கு ரன், சண்டக்கோழி படங்களை விட இந்த படம் சிறந்ததாக இருக்கும். பாடல் காட்சிகளில் நடனமாடும்போது அவர் எனக்கு டிப்ஸ் கொடுத்தார். அதேபோல் தலைவாசல் விஜய், க்ளோசப் காட்சிகளில் கண்ணை சிமிட்டாமல் நடிக்க வேண்டும் என்று சில டிப்ஸ்களை கொடுத்தார். அது எனக்கு பெரிய பயனாகவும் இருந்தது.
மேலும், இந்த படத்தை படமாக்க நினைக்கும்போது நம்மிடம் உள்ள பொக்கிஷத்தை கதையாக்க நினைத்தேன். அந்த வகையில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காட்சிகளை அப்போதைய லொகேஷனை உருவாக்கி படமாக்கியிருக்கிறேன். குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் ஒருவர், 3 ஆயிரம் வருடத்துக்கு முந்தைய பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறார். இது இன்னமும் தமிழ்நாட்டில்கூட நிறையபேருக்கு தெரியாது. ஆனால் வெளிநாட்டில் இருந்து சிலர் வந்து அந்த பொருட்களை ஆராய்ச்சி செய்து டாக்டரேட் பட்டம் வாங்கிக்கொண்டு வருகிறார்கள்.
இப்படி நமக்குள் எவ்வளவோ அறிய தகவல்கள் உள்ளன. அதையெல்லாம் இந்த படத்தில் வெளிகொண்டு வந்து, அனைவரையும் நமக்குள் இவ்வளவு அற்புதங்கள் இருக்கிறதா என்று வியக்க வைக்கப்போகிறேன். இந்த படத்தைப்பார்த்து நான் தமிழன்டா என்று அனைவருமே காலரை தூக்கி விடலாம் என்று சொல்லும் பார்த்திக்கு, தொடர்ந்து படம் இயக்குவதை விட, ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாம். இந்த படத்தில் ஜனத்தொகையைப்பற்றி சொல்லியிருப்பவர், அடுத்தடுத்து படங்களில் நாட்டுக்குத் தேவையான இன்னும் பல நல்ல கருத்துக்களுடன் மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.