டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் நடிகையாக வேண்டியவர் ப்ரியாமணி. ஆனால் பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருது பெற்ற அவர், பின்னர் மெகா படங்களாக நடிக்காமல் மெகா டைரக்டர் படங்களாக தேடினார். விளைவு, மணிரத்னத்தின் ராவணன் படவாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படத்தில் ஐஸ்வர்யாராய் நாயகியாக நடித்திருந்தார்.
விளைவு, ப்ரியாமணிக்கு விக்ரமின் தங்கை வேடம்தான் கிடைத்தது. மெகா டைரக்டர் படம் என்று நம்பி நடித்து பெரிய குழிக்குள் விழுந்தார் ப்ரியாமணி. அதையடுத்து அவரது மார்க்கெட்டும் படுத்துக்கொண்டது. அதனால், பிழைப்பு தேடி தெலுங்கு, கனனடம் என்று சென்ற ப்ரியாமணிக்கு இப்போது வரை அந்த மொழிகள்தான் ஆதரித்து வருகிறது.
ஆனபோதும், ப்ரியாமணியின் மார்க்கெட் அடங்குவதற்கான சூழ்நிலை தெரிகிறது. அதனால் இந்த மரியாதையோடு திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவெடுத்திருக்கிறாராம். இந்த தகவல் அறிந்த ஒரு பிரபல தொழிலதிபர், தனக்கு இரண்டாவது மனைவியாக வருமாறு ப்ரியாமணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறாராம்.
ஆனால், அதைக்கேட்டு டென்சனாகி விட்டாராம் ப்ரியாமணி. 40 வயது நடிகைகளே முதல் மனைவியாக சென்று கொண்டிருக்கும்போது, இரண்டாவது மனைவியாக போகும் அளவுக்கு எனக்கொன்றும் வயதாகி விடவிலலை என்று அந்த அழைப்பை நிராகரித்து விட்டாராம். அதோடு, ஏற்கனவே தான் ரகசியமாக காதலித்து வரும் ஒளிப்பதிவாளர் பற்றியும் இந்த இடத்தில் கூறியிருககும் ப்ரியாமணி, தொழிலதிபருக்கு இரண்டாவது மனைவி ஆவதை விட, ஒளிப்பதிவாளருக்கு முதல் மனைவி ஆவது எவ்வளவோ மேல் என்று கூறியுள்ளார்.