ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அங்காடித்தெரு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் மகேஷ். படத்தில் ஜவுளிக்கடை சேல்ஸ் மேனாக நடித்திருந்த மகேஷின் யதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்தது. அங்காடித்தெரு வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு ஏராளமான புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒரு படத்தை மகேஷ் தேர்வு செய்து நடிக்க சம்மதித்து இருக்கிறார். இந்த படத்துக்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. பூபாலன் சின்னன் வழங்க, பாக்ஸ் ஆபீஸ் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் எஸ்.பாலாஜி தயாரிக்கிறார். இதுவும் ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம்தான். இதில், இரவில் திருடனாகவும், பகலில் மாணவராகவும் மகேஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி, மற்றும் நடிகர்-நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது. டைரக்டர் ஏ.வெங்கடேஷ், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா, இசையமைக்கிறார். பகவதி, மலைமலை, ஏய், மாஞ்சாவேலு ஆகிய படங்களில் ஏ.வெங்கடேசிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த பாலாஸ்ரீராம், இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகிறார்.