'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் |
'டுவிட்டர் நாயகன்' என்றுதான் ராம்கோபால் வர்மாவை அழைக்க வேண்டும். அந்த அளவிற்கு அடிக்கடி பிரச்சனைக்குரிய விஷயங்களைப் பற்றி டுவிட்டரில் பதிவு செய்து பரபரப்பை கிளப்பி வருகிறார். அவருடைய படங்கள்தான் சர்ச்சையைக் கிளப்புவதா இருக்கிறதென்று பார்த்தால், அவர் சொல்வதும் சர்ச்சைக்குரியதாகவே மாறி வருகிறது. இனி, டுவிட்டர் சர்ச்சையை கொஞ்ச காலம் அவர் ஒதுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அடுத்து ஒரு நிஜ வாழ்க்கையைப் பற்றிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன் சிலரின் நிஜ வாழ்க்கையை மையமாக வைத்து “சர்க்கார், ரத்த சரித்ரா, கம்பெனி” ஆகிய படங்களை இயக்கினார். அந்தப் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெற்ற படங்களாக அமைந்தன.
அடுத்து, பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றிய படம் ஒன்றை ராம்கோபால் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் நடிக்க அமிதாப் பச்சனை அணுகினாராம். ஆனால், அவர் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். அமிதாப்புக்கு நெருக்கமானவர்கள் சர்ச்சைக்குரிய விதத்தில் படமெடுக்கும் ராம்கோபால் வர்மாவை தற்போது தவிர்ப்பது நலம் என்றும் ஆலோசனை சொல்லி வருகிறார்களாம். அமிதாப் மறுத்தாலும் வேறு ஒருவரை நடிக்க வைக்கும் முடிவிலும் ராம்கோபால் வர்மா இருக்கிறாராம். ஆனாலும், அமிதாப்தான் அவருடைய முதல் சாய்ஸ் என்கிறார்கள். இப்படம் பற்றிய செய்தியை ராம்கோபால் வர்மா டுவிட்டரில் போடாமலா விட்டு விடுவார்...பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...