'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் பல படங்களில் ஒன்றாக நடித்து சாதனை படைத்த ரன்பீர் கபூர்-தீபிகா படுகோனே ஜோடி தற்போது மீண்டும் இணைய உள்ளது. ராம் லகான் படத்தின் ரீமேக்கின் இந்த ஜோடி மீண்டும் இணைய ஒப்பந்தமாகி இருப்பது தான் பாலிவுட்டின் தற்போதைய செய்தி.
அனில் கபூர்-ஜாக்கி ஷரோப் நடித்த ராம் லகான் படத்தை தற்போது ரோஹித் ஷெட்டி ரீமேக் செய்ய உள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் நடித்த கதாபாத்திரத்தில் ரன்பீரை நடிக்க வைக்க ரோஹித் ஷெட்டி ஏற்கவே முடிவு செய்து விட்டராம். அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க பல நடிகைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. முடிவாக மாதுரி தீட்சித் நடித்த வேடத்தில் நடிப்பதற்கு தீபிகா படுகோனே ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
யேஹ் ஜவானி ஹேய் தீவானி படத்தில் ரன்பீர்-தீபிகா ஜோடியின் கெமிஸ்ட்ரி எதிர்பார்த்ததை விட பெருத்த வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி தீபிகா, ரோஹித் ஷெட்டியின் ஆஸ்தான ஹீரோயின் என்பதால் அவரையே இந்த படத்திலும் நடிக்க வைக்க ரோஹித் ஷெட்டி முடிவு செய்துள்ளாராம்.