‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |
குழந்தை பெற்றபின் நடிக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா ராய், இப்போது ஒரு படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியுள்ளார். அது சஞ்சய் குப்தா இயக்கும் ஜாஸ்பா படம். இப்படத்தில் ஐஸ்வர்யாவுடன், இர்பான் கான் முக்கிய ரோலில் நடிக்கிறார். முன்னதாக இப்படத்தின் ஷூட்டிங் இம்மாதம் துவங்குவதவாக இருந்தது. ஆனால் தற்போது சஞ்சய் குப்தா இயக்கி வரும் மும்பை சகா படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியாததால் ஜாஸ்பா படத்தின் படப்பிடிப்பு தள்ளிபோய் உள்ளது.
இதுப்பற்றி விசாரித்ததில், மும்பை சகா படத்தில் நடிக்கும் ஜான் ஆபிரஹாம், வெல்கம் பேக் என்ற படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் இப்படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளதாம். இதனால் மும்பை சகா படத்தின் ஷூட்டிங் தாமதமாவதுடன், ஜாஸ்பா படத்தின் ஷூட்டிங்கும் தாமதமாகியுள்ளதாம். இருந்தாலும் டிசம்பரில் ஜாஸ்பா படத்தின் ஷூட்டிங் உறுதியாக ஆரம்பமாகும் என்று கூறியிருக்கிறார் இயக்குநர் சஞ்சய் குப்தா.