பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
ஒளிப்பதிவாளராக இருந்த ரவி.கே.சந்திரன், இயக்குநராக களமிறங்கியுள்ள படம் ''யான்''. ஜீவா ஹீரோவாகவும், 'கடல்' துளசி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். ஆக்ஷ்ன் படமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று(செப்., 29ம் தேதி) நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜீவா, ஜான் படம் எனக்கு முக்கியமான படம். இந்தாண்டு எனக்கு தீபாவளி, யான் தீபாவளி என்றே சொல்லலாம். யான் படத்தில் எல்லா காட்சிகளும் சவாலாக இருந்தது. குறிப்பாக டான்ஸ் மற்றும் சண்டைக்காட்சிகள் பெரும் சாவலாக இருந்தது. மொராக்கோ நாட்டில், பாலைவனம் மற்றும் விமானத்தில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் ரசிகர்களிடம் பெரிதும் பேசப்படும் என்கிறார் ஜீவா.