டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிற்கு, வருத்தம் தெரிவிக்கும் விதமாக தமிழ் திரையுலகம் சார்பில் சார்பில் நாளை(செப்., 30ம் தேதி) ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் திரையுலகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு, எங்கள் தமிழ் திரையுலகின் சார்பில் வருத்தத்தையும், உணர்வுகளையும் தெரிவிக்கும் வகையில் அறவழியில் மாபெரும் மவுன உண்ணாவிரத போராட்டாத்தை அனைத்து தமிழ் திரையுலகின் சார்பாக சென்னை சேப்பாக்கம், அரசு விருந்தினர் மாளிகை அன்று நாளை காலை 9.30 மணிமுதல் மாலை 5.00 மணி வரை நடைபெற இருக்கிறது.
இதில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய பிலிம் சேம்பர், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி, தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர் சங்கம், திரைப்பட உரிமையாளர் சங்கம், சின்னத்திரை மற்றும் பி.ஆர்.ஓ., சங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இதனையொட்டி நாளை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன, தியேட்டர்களில் திரைப்பட காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.