'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் குறிஞ்சி மலர், முத்தாரம், திருமதி செல்வம் தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த ரிந்தியா இப்போது மலையாளத்தில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். இந்த தொடர் தமிழில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரின் ரீமேக் ஆகும். "தமிழில் குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்தேன். எனக்கு வில்லியாக நடிக்க வேண்டும் என்று ஆசை. திடீரென்று வில்லியாக நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம் இருந்தது. அதனால் மலையாள சீரியலுக்கு வந்து விட்டேன். இதைத் தவிர வேறு காரணம் எதுவும் இல்லை. தமிழில் கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில தமிழுக்கு திரும்பி விடுவேன்" என்கிறார் ரிந்தியா.