Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதை உரிமையைக் கொடுத்து தவிக்கும் இயக்குனர்கள்...!

28 செப், 2014 - 12:19 IST
எழுத்தின் அளவு:

ஒரு படத்தின் வெற்றிக்கு அனைவரும் காரணம் என்று சொல்வார்கள், ஆனால், படம் தோல்வியடைந்தால் அதற்கு இயக்குனர் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்படும். அடுத்து படத்தில் நடித்த ஹீரோயின் மீதோ அல்லது வேறு சிலர் மீதோ ராசி இல்லாதவர்கள் என்று முத்திரை குத்தி விடுவார்கள். நட்சத்திரங்களைப் பொறுத்தவரையில் ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அவர்கள் தங்களது சம்பளத்தை உயர்த்தி அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து விடுவார்கள். அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம் கிடைத்து விடும். ஆனால், அந்தப் படத்தை இயக்கியவர் அனுபவம் வாய்ந்த இயக்குனர் என்றால் அவருக்கு நல்ல சம்பளமும் கிடைக்கும், அடுத்தடுத்து புதிய படங்களும் கிடைக்கும்.


அதே சமயம், அந்தப் படத்தை இயக்கியது புதுமுக இயக்குனர் என்றால் அடுத்து புதிய படம் மட்டுமே கிடைக்கும். தான் இயக்கிய முதல் படத்தின் வெற்றிக்கு அவருக்கு ஒரு காரோ அல்லது குறிப்பிட்ட தொகையோதான் அன்பளிப்பாக கிடைக்கும். சமீபத்தில் 'கத்தி' பட இசை வெளியீட்டில் கூட இன்றைய முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் முதல் படத்திற்கு தான் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த நிலை இன்னும் மாறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது அறிமுகமாகும் புதிய இயக்குனர்கள் அவர்கள் பல வருடங்களாக தங்களது கற்பனையில், அனுபவத்தில் உருவாக்கிய கதையை தயாரிப்பாளர்கள் கதை உரிமையை அவர்களுக்கே கொடுத்துவிட வேண்டும் என்று சொல்கிறார்களாம். இதனால், அறிமுக இயக்குனர்கள் இயக்கிய முதல் படம் வெற்றி பெற்றாலும் கூட அதே கதையை வைத்துக் கொண்டு அவர்களால் வேறு மொழிப் படங்களில் படத்தை இயக்க முடிவதில்லையாம். முன்பெல்லாம் ஒப்பந்தம் போடும் போது இயக்குனருக்கும் அதில் உரிமை என்று சேர்த்துக் கொள்வார்கள், ஆனால் இப்போது அப்படியில்லையாம்.


சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ஒரு படத்தின் இயக்குனர் இந்த கதை உரிமை விஷயத்தால் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடியாமல் தவிக்கிறாராம். இதனால் பல அறிமுக இயக்குனர்கள் மன வருத்தத்தில் இருக்கிறார்கள். இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in