ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கர்நாடக மாநிலம் மங்களூரைச்சேர்ந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. ஆனபோதும, கன்னட படங்களை விட இந்தியில்தான் இவர் அதிகமாக நடித்திருக்கிறார். அதோடு, 1993ல் பாசிகர் என்ற இந்தி படத்தில் அறிமுகமான ஷில்பா, 10 ஆண்டுகளாக இந்திய சினிமாக்களில் கொடி கட்டிப்பறந்தவர். தமிழில்கூட, மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு விஜய்-ஜோதிகா நடித்த குஷி படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றி விஜய்யுடன் நடனமாடினார்.
அதன்பிறகு 2009ல் ராஜ்குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு, சினிமாவில் நடிப்பதை படிப்படியாக குறைத்த ஷில்பா ஷெட்டி, கணவருடன் இணைந்து பிஸ்னஸில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவர் ராஜ்குந்த்ராவுடன் வியாபார விசயமாக ஜலந்த்பூரில இருந்து அம்ரிஸ்டார் என்ற ஏரியாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தாராம் ஷில்பா ஷெட்டி.
அப்போது, வேகமாக சென்று கொண்டிருந்த இவர்களின் காருக்கு முன்னாடி சென்ற பேருந்தின் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால், ஷில்பா சென்ற காரை ஓட்டிய டிரைவரும் பிரேக் போட்டாராம். ஆனால் அந்த நேரத்தில் இவர்களை பின்தொடர்ந்து வேகமாக வந்து கொண்டிருந்த இன்னொரு கார், இவர்களது கார் மீது வேகமாக மோதியதாம். இதனால், அந்த காரின் முன்பகுதியும், ஷில்பா சென்ற காரின் பின்பகுதியும் பலத்த சேதமடைந்ததாம். இருப்பினும், காரில் சென்ற யாருக்கும் எந்த காயமும் ஏற்படாமல் அதிர்ஷடவசமாக தப்பினார்களாம்.