தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
1981-ல் கே.பாலசந்தரின் தில்லுமுல்லு படத்தில் அறிமுகமானவர் விஜி சந்திரசேகர். பிரபல நடிகை சரிதாவின் தங்கையான இவர், அதன்பிறகு கிழக்கு சீமையிலே, இந்திரா, உள்ளிட்ட பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம் படத்தில் லீடு ரோலில் நடித்திருந்தார். அவர் நடிப்பு பேசும்படியாக இருந்ததால் சில விருதுகளும் விஜிக்கு கிடைத்தது.
அதன்பிறகும் மதயானைக்கூட்டம் உள்பட சில படங்களில் நடித்த விஜி சந்திரசேகர், தற்போது அதே லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள, ''நெருங்கிவா முத்தமிடாதே'' என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். ஆனால், இந்த வேடத்தில் நடிப்பதற்கு அவரை அழைத்து பேசியபோது, நான் நடிப்பேன்.ஆனால் சம்பளம் வாங்கிக்கொள்ள மாட்டேன். இதற்கு ஓ.கே என்றால் நானும் நடிக்க ஓகே என்றாராம்.
அதற்கான காரணமாக விஜி கூறுகையில், சினிமாவில் சின்னச்சின்ன வேடங்களில்தான் நான் நடித்துக்கொண்டிருந்தேன். அப்படிப்பட்ட என்னை நம்பி அவர் ஆரோகணம் படத்தில் ஹீரோயின் வேடம் கொடுத்தார். அந்த படத்தைப்பொறுத்தவரை மொத்த கதையையும் நான்தான் சுமந்தேன். அதற்காக எனக்கு ஏராளமான பாராட்டுக்கள். அப்படியொரு வாய்ப்பை என்னை நம்பி யாருமே தர மாட்டார்கள். ஆனால் லட்சுமி ராமகிருஷ்ணன் கொடுத்தார். அதற்காக நான் ஆயுசுக்கும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
அதனால்தான் இந்த படத்தில் அவர் என்னை நடிக்க அழைத்தபோது, சம்பளம் வாங்க மாட்டேன் என்று சொன்னேன் என்று சொன்ன விஜிசந்திரசேகர், இந்த நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் எனக்கு சின்ன ரோல்தான் என்றாலும் மனசை பிழியும் வேடம். மேலும், இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நான் திருப்பதிக்கு சென்று சாமியை வேண்டிக்கொண்டேன் என்றார்.