ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் டில்லியில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு சென்ற ப்ளஸ்-2 படிக்கும் மாணவன், வெள்ளை புலி அடைக்கப்பட்டிருந்த இடத்தின் தடுப்புச்சுவரை தாண்டி சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டான். அதையடுத்து, அந்த வெள்ளைப்புலியால் கொல்லப்பட்டான். முன்னதாக, அந்த புலியிடமிருந்து அந்த இளைஞனை காப்பாற்ற பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், அந்த வெள்ளைப்புலியை கொன்று விடுமாறு நாடெங்கிலும் இருந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு டுவிட்டர், பேஸ்புக்கில் கருத்து கூறி வருகின்றனர். அதேசமயம், புலியை கொல்லக்கூடாது. என்றும் ஒருசாரர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில, விலங்குகள் மீதும் அதிக பாசம் கொண்டவரான நடிகை த்ரிஷாவும், அந்த வெள்ளைப்புலியை கொல்லக்கூடாது என்று ஜனாதிபதிக்கு தனது டுவிட்டர் மூலம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். விலங்குகள் நல வாரியத்தில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கும் த்ரிஷா, புலியை கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறும் தன்னுடன் பேஸ்புக்கில் தொடர்பில் இருப்பவர்களிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.