ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் ரஜினிகாந்த்தும், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றனர். சமீபகாலமாக இரண்டு - மூன்று ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது பேஷனாகிவிட்டது. ஏற்கனவே ரஜினி-கமல், கமல்-பிரபு உள்ளிட்ட பலர் நடிகர்கள் சேர்ந்து நடித்துள்ளனர். இடையில் சிலகாலம் இந்த கலாச்சாரம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டு-மூன்று ஹீரோக்கள் சேர்ந்து நடிக்க தொடங்கி விட்டனர். தற்போது ரஜினி-கமலை நடிக்க வைக்க பலர் முயற்சித்து வருகின்றனர். மேலும் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காத என பலரும் தவம் கிடந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் நடிகர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு, இப்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவிற்கு கிடைத்துள்ளது. ஆமாம், ரஜினியும், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றனர்.
சமீபத்தில், பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும், மகேஷ்பாபுவின் உறவினருமான சூர்ய நாராயணராவ், ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். ஐதராபாத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் லிங்கா இறுதிக் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, ரஜினியைச் சந்தித்த சூரிய நாராயணராவ், தனது அடுத்தப்படம் பற்றி பேசியுள்ளார். அதில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்துள்ளார். சூர்ய நாராயணராவ்வின் வேண்டுகோளை ஏற்று ரஜினியும் நடிக்க சம்மதம் சொன்னதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் ரஜினியுடன், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபும் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப்படம் தயாராகி இருக்கிறதாம்.
தற்போது ரஜினி லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து ஈராஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ்க்கு ஒரு படம் பண்ணுகிறார். அதற்கு அடுத்தப்படியாக சூர்ய நாராயணராவ் தயாரிக்கும் படத்தில், மகேஷ் பாபுவுன் சேர்ந்து நடிக்க இருக்கிறார்.