ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரு படத்தைப் பற்றிய செய்திகளை மீடியாக்கள் சரியாகக் கொண்டு போய்ச் சேர்த்தால்தான் அந்தப் படம் பற்றிய செய்திகள் ரசிகர்களை சரியாகச் சென்றடையும். படம் வெளியீட்டிற்குப் பிறகு விளம்பரமும் ஒரு முக்கிய விஷயமாக இந்தக் காலத்தில் பார்க்கப்படுகிறது. விளம்பரத்தோடு படங்களைப் பற்றிய விமர்சனங்களும் பாசிட்டிவ்வாக வந்தால்தான் அந்தப் படங்கள் கலெக்ஷனில் வசூலைக் குவிக்கிறது.
சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் மூலம் ஒரு படத்தைப் பற்றிய கமெண்ட்டுகள் அதிகம் பரவி வந்து அந்தப் படத்தின் வசூலுக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடிய சூழலையும் உருவாக்கி விடுகிறது. நல்ல படங்கள் தப்பித்துக் கொள்கின்றன, ஆனால் பெரிய ஹீரோக்கள் நடித்த சுமாரான படங்களாக இருந்தாலும் அது தோல்வியில் போய் முடிகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் 'அஞ்சான்'. இருந்தாலும் நல்ல படங்களை யாரும் பாராட்டத் தவறுவதில்லை. ஏன், சில இயக்குனர்கள் கூட படங்களைப் பற்றிய அவர்களது கருத்துக்களைச் சொல்லி அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கச் செய்து வருகிறார்கள்.
ஷங்கர், வசந்தபாலன் போன்ற ஒரு சில இயக்குனர்கள் சமீபகாலங்களில் புதிய படங்களைப் பற்றிய அவர்களது நல்ல கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள். நேற்று வெளியான 'மெட்ராஸ்' படம் பற்றி இயக்குனர் வசந்தபாலன் ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். “மெட்ராஸ் திரைப்படம் பார்த்தேன்.வடசென்னையில் ஒரு பகுதியின் வாழ்க்கையை அதன் அழகுற மிக இயல்பாக சினிமாத்தனம் இல்லாமல் ரஞ்சித் பதிவு பண்ணியிருக்கிறார்.வழக்கம் போல எந்த திரைப்படம் வந்தாலும் கொரியன் படத்தின் காப்பி என்று கூவுவார்கள்.
இது சென்னையின் கதை. ஒரு சுவரின் கதை. கதை துவங்கும் போது அத்தனை அழகாக துவங்குகிறது.குட்டி குட்டி கதாபாத்திரங்கள் மிக அழகாக இயல்பாக கோர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.ஒளிப்பதிவு மிகமிக நேர்த்தியாக இயல்பாக படத்தின் தன்மை கெடாமல் பண்ணப்பட்டு இருக்கிறது. கார்த்தி அழகாக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். எடிட்டிங் கச்சிதம்.மெட்ராஸ் குழுவுக்கு என் வாழ்த்துக்கள் ,” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.