'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
சமீபகாலமாக திரையுலகம் நலிந்து கொண்டு வருகிறது என்று சொல்பவர்கள் அதிகம். தமிழ்த் திரையுலகிலும் சரி, தெலுங்குத் திரையுலகிலும் சரி திருட்டு வி.சி.டி என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதோடு வெளிவரும் சில பெரிய படங்களும் அதிகபட்ச வசூலைக் குவிக்க முடியாமல் திணறி வருகின்றன. அதற்கு எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம். ஆனால், அது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் பேசித் தீர்க்காமல் திருட்டு வி.சி.டி.யை மட்டுமே குற்றம் சொல்லி வருகிறார்கள். அதிகபட்ச நடவடிக்கை மூலம் திருட்டு வி.சி.டி.யை தாராளமாக ஒழித்து விட முடியும். அதோடு படங்களின் தயாரிப்புச் செலவும், சில நடிகர்களின் சம்பளமும் அதிகமாக உயர்வதும் அதற்கு ஒரு காரணம் என்று சினிமாவை நேசிக்கும் பலர் சொல்லி வருகிறார்கள்.
தமிழில் எதிர்பார்த்த சில படங்கள் வெற்றி பெறாமல் போவதும், எதிர்பாராத சில படங்கள் வெற்றி பெறுவதுமாக இருந்து வருகிறது. ஆனால், தெலுங்குத் திரையுலகில் கடந்த சில வாரங்களில் வெளிவந்த இரு பெரிய படங்களான 'ரபாசா மற்றும் ஆகாடு' ஆகிய படங்களின் தோல்வி அவர்களைப் பெரிதும் பாதித்து விட்டதாம். சுமார் 75 சதவீத அளவிற்கு படத்தை வாங்கியவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். ஆனால், விமர்சகர்களோ அந்தத் தோல்விக்கு படத்தில் சரியான 'கன்டென்ட்' இல்லாததே காரணம் என்கிறார்கள். நல்ல கதையும், விறுவிறுப்பான திரைக்கதையும் இருந்தால் மட்டுமே ஒரு படம் வெற்றி பெற முடியும் என்பது தெரிந்திருந்தாலும் அந்தப் படங்களில் அரைத்த மாவையே அரைத்திருந்தார்கள் என்கிறார்கள் அவர்கள். சிறிய படங்களின் தோல்வியால் வரும் பாதிப்பு சிறிய அளவிலேயே உள்ளது. ஆனால், பெரிய படங்களால் பலத்த நஷ்டம் ஏற்படுவதுதான் வெகுவாகப் பாதிக்கிறதாம்.
அடுத்து வெளிவர இருக்கும் ராம் சரண் தேஜா நடித்துள்ள 'கோவிந்துடு அந்தாரிவாடிலே' படமாவது தங்களைக் காப்பாற்றுமா என தெலுங்குத் திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.