தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் பெண் இயக்குனர்கள் வருவதே அரிதான விசயம்தான் அப்படியே வந்தாலும் ஆசைக்கு ஒரு படத்தை இயக்கி விட்டு காணாமல் போய் விடுவார்கள். ஆனால் தற்போது சில பெண் இயக்குனர்கள சாதித்தே தீருவோம் என்று களமிறங்கியுள்ளனர். அவர்களில் ரஜினியின் கோச்சடையானை இயக்கிய செளந்தர்யா, 3 படத்தையடுத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கி வரும் ஐஸ்வர்யா தனுஷ், துரோகி பட டைரக்டர் சுதா, ஆரோகணம் படத்தை அடுத்து தற்போது நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தை இயக்கியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், வணக்கம் சென்னை படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி ஆகியோர் குறிப்பிடத்தக்க இயக்குனர்களாக உள்ளனர்.
இவர்களில் கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தில் விஜயசேதுபதி நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர் ரொம்ப பிசியாக இருப்பதால் இப்போதைக்கு கால்சீட் கிடைக்காத நிலை. அதனால் வாலு, இது நம்ம ஆளு படங்களை முடித்து விட்ட சிம்புவை தனது புதிய படத்தில் நடிக்க பேசியுள்ளாராம் கிருத்திகா.
கதையை கேட்ட சிம்புவும் நடிக்க சம்மதம் சொல்லி விட்டாராம். மேலும், எனது திறமையை வெளிப்படுத்த சரியான கதைக்களங்கள் கிடைக்கவில்லை என்று தன்னை வைத்து படம் பண்ணும் இயக்குனர்களிடம் புலம்பி வரும் சிம்புவுக்கு இந்த படத்தில் 4 கெட்டப்புகளில் நடிக்கும் வேடமாம். அதனால் இந்த கதை எனது நடிப்பு பசிக்கு நல்ல தீனியாக அமையும் என்று கூறியுள்ளாராம் சிம்பு.