ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த விவகாரத்தில் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் ரஞ்சிதா தற்போது புதிய கடிதம் ஒன்றை பெங்களூரு போலீசுக்கு அனுப்பியுள்ளார். அதில், தான் அமெரிக்காவில் உள்ள தனது சகோதரியுடன் இருப்பதாகவும், தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும் கூறியிருக்கிறார்.
நித்தியானந்தா விவகாரத்தில் ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்தினால் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என கருதிய போலீசார் அவரை கைது செய்வதில் முனைப்பு காட்டி வருகிறார்கள். ஆனால் ரஞ்சிதாவோ போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தலைமறைவாகவே இருக்கிறார். ஏற்கனவே 2 கடிதங்களை எழுதிய ரஞ்சிதா, இப்போது அமெரிக்காவில் இருப்பதாக பெங்களூரு சிஐடி போலீசுக்கு புது கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ரஞ்சிதா வாக்குமூலம் கொடுத்தால் நித்தியானந்தா மீதான வழக்குகள் உறுதிபடுத்தப்படும் என்கிற நிலையில் அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் அவர் அனுப்பியுள்ள புதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நான் இப்போது அமெரிக்காவில் உள்ள எனது சகோதரியின் வீட்டிங் இருக்கிறேன். எனது உடல்நிலை சரியில்லை. அதனால் டாக்டர்கள் அறிவுரைப்படி ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் என்னால் வாக்குமூலம் கொடுக்க இயலாது. உடல்நிலை சரியான பிறகு கண்டிப்பாக போலீஸ் முன் ஆஜராகி நடந்த உண்மைகளை கூறுவேன். அதுவரை என்னை போலீசார் தேட வேண்டாம். என்னை தேடும் பணியை நிறுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ரஞ்சிதா தனது கடிதத்தில் கூறியிருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஞ்சிதா எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்து வந்த நிலையில், அவர் அமெரிக்காவில் இருப்பது இக்கடிதத்தின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.