டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமா வந்த பின் நாடகம் அழிந்தது என்று சொல்வார்கள், டிவி வந்த பின் சினிமா அழிந்ததாகவும் தற்போது சொல்லி வருகிறார்கள். அறிவியல் வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்கள் ஒன்றை ஒன்றை அழிப்பதாகச் சிலர் சொன்னாலும் அப்படிப்பட்ட வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. மாற்றங்களால் ஏற்படும் வளர்ச்சியை அவரவர் தொழில்களில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கேற்றபடி சிந்தித்து நடைமுறைப்படுத்த வேண்டும். சாட்டிலைட் தொலைக்காட்சிகள் பெருகிய பிறகு சினிமாவைப் பார்க்கும் ஆர்வம் மக்களிடையே குறைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். கடந்த பத்து வருடங்களாக டிவி சீரியல்களில்தான் மக்கள் மூழ்கிப் போயிருக்கிறார்கள். அதனால், பெண்கள் திரைப்படங்களைப் பார்க்க வருவதேயில்லை என்று சொல்வதிலும் சற்று உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அது மட்டுமே காரணமுமில்லை.
சில தேசிய விருதுகள், பல மாநில விருதுகள் ஆகியவற்றைப் பெற்ற மலையாளத் திரையுலகத்தைச் சேர்ந்த திறமையான இயக்குனர்களில் ஒருவரான ஷியாம் பிரசாத், தொலைக்காட்சித் தொடர்களை தடை செய்ய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். “இந்த சமுதாயத்தைச் சுத்தப்படுத்த வேண்டுமென்றால் முதலில் சீரியல்களுக்கு தடை விதிக்க வேண்டும். தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களைப் பார்க்கும் போது அப்படி ஒரு எண்ணம் கண்டிப்பாக வரும். இந்த சமுதாயத்தையும், தனிப்பட்ட மனிதரையும் சீரியல்கள் அந்த அளவிற்கு நலிவடையச் செய்கிறது,” என்றும் அவர் பேசியிருக்கிறார்.
அவர் சொல்வதிலும் ஒரு உண்மை இருக்கிறது, சில தொலைக்காட்சித் தொடர்களில் குடும்ப உறவுகளைச் சித்தரிப்பதிலும், பல அபத்தமான காட்சிகளை வைக்கிறார்கள் என்றும் நீண்ட நாட்களாகவே குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.