ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினிகாந்த், தமிழில் மட்டுமல்லாது, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், கன்னடம், ஒரே ஒரு ஆங்கிலப் படம் ஆகியவற்றில் நடித்தவர். கடந்த சில வருடங்களாக தமிழில் மட்டுமே நடித்து வருகிறார். அவர் கடைசியாக நடித்த தெலுங்குப் படம் 1995ல் வெளிவந்த 'பெத்த ராயுடு'. அதன் பின் அவருடைய படங்கள் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டதே தவிர, அவர் நேரடியாக எந்தத் தெலுங்குப் படத்திலும் நடிக்கவில்லை. இதனிடையே தெலுங்குத் திரையுலகின் தயாரிப்பாளரான சூரியநாராயண பாபு என்பவர் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இளம் ஹீரோவான மகேஷ் பாபு இருவரையும் வைத்து ஒரு தெலுங்குப் படத்தைத் தயாரிக்கப் போவதாக சில நாட்களாகவே டோலிவுட்டில் செய்தி பரவி வருகிறது.
'லிங்கா' படப்பிடிப்பு சமயத்தில் ரஜினிகாந்தை நேரில் சென்று சூரியநாராயண பாபு சந்தித்தாராம். அப்போது அவர் ரஜினிகாந்தை தெலுங்குப் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ரஜினிகாந்த், மகேஷ் பாபுவின் அப்பாவான கிருஷ்ணா ஆகியோர் இணைந்து நடித்த ஒரு தெலுங்குப் படத்தை சூரியநாராயண பாபு பல வருடங்களுக்கு முன் தயாரித்திருந்தாராம். அதனால், மீண்டும் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க அவர் விருப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்போது கிருஷ்ணாவின் மகன் மகேஷ் பாபு தெலுங்குத் திரையுலகின் முன்னணி ஹீரோவாக இருப்பதால், அவரையும், ரஜினிகாந்தையும் இணைத்து நடிக்க வைத்து படம் தயாரித்தால் நன்றாக இருக்கும் என்று அவர் விருப்பப்படுவதாகவும் கூறுகிறார்கள். இந்த திட்டம் மேற்கொண்டு வளருமா அல்லது பேச்சு அளவில் நின்று விடுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.