ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது' என்று சொல்வார்கள். இப்போதெல்லாம் 'டுவிட்டரிலும், ஃபேஸ் புக்கிலும் கருத்து சொல்லாமல் இருக்க முடியாது' என்று சிலரை தாராளமாகச் சொல்லலாம். தினசரி ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லி வம்பை விலைக்கு வாங்காமல் சிலரால் இருக்க முடியாது. நமது திரையுலக நட்சத்திரங்களிலும் அநேகம் பேர் அவர்களது சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லி பரபரப்பையோ, சர்ச்சையையோ கிளப்பி விடுவார்கள். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவும் அப்படிப்பட்டவர்களில் ஒருவர்.
சில மாதங்களுக்கு முன் மகேஷ் பாபு நடித்து வெளிவந்த '1 நோநொக்கடைன்' என்ற படத்தின் போஸ்டரைப் பற்றி ஒரு கமெண்ட் அடித்திருந்தார். அதன் பின் கொதித்தெழுந்த மகேஷ் பாபு ரசிகர்கள் சமந்தாவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலவிதமான கமெண்ட்டுகளை அடிக்க ஆரம்பித்தனர். இதனால், மகேஷ் பாபுவுக்கும் சமந்தாவுக்கும் இடையே பிரச்சனை என்றெல்லாம் செய்திகள் வர ஆரம்பித்தன. அதன் பின் சில வாரங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற விருது விழாவில் இருவரும் சந்திக்க நேர்ந்த போது சமரசம் ஆகிவிட்டார்கள் என்றும் சொன்னார்கள்.
ஆனால், தற்போது மகேஷ் பாபு நடித்து வெளிவந்த 'ஆகாடு' படம் படுதோல்வியடைந்து விட்டது. இந்த சந்தர்ப்பத்தில் சமந்தா டுவிட்டரில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். “இப்படிப்பட்ட 'பூமராங்' ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் மீது அதை வேகமாக வீசி அடித்தீர்கள், அவை சரியான சமயத்தில் உங்கள் தலை மீது வந்து விழுந்திருக்கிறது,” என்று சொல்லியிருக்கிறார். சமந்தாவின் இந்த கருத்து 'ஆகாடு' படத்தைப் பற்றித்தான் என்றும் சமயம் பார்த்து யாரையோ குறிப்பிடுவது போல் சமந்தாவும் அவர் பங்குக்கு மகேஷ் பாபு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.