'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கெளதம்மேனன் இயக்கிய மின்னலே, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் என பல படங்களுக்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். சூப்பர் ஹிட் பாடல்களையும் கொடுத்தார். ஆனால் சில படங்களுக்கு கெளதம்மேனன் கூட்டணியில் இருந்து விலகியிருந்த ஹாரிஸ் தற்போது அஜீத்தின் 55வது படத்தின் மூலம் மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறார்.
இந்த படம் எப்படி கெளதம்மேனனுக்கு முக்கியமான படமோ அதேபோல் ஹாரிஸ் ஜெயராஜ்க்கும் முக்கியான படம்தான். காரணம் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பிறகு அவரது பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. அதனால் முதன்முதலாக அஜீத் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பினை பெற்றிருப்பவர். இப்படத்தில் மெகா ஹிட் பாடல்களை கொடுத்து விட வேண்டும் என்று கூடுதலாக மெனக்கெட்டு வருகிறார்.
அதன்காரணமாக, ஆரம்பத்தில் இருந்தே ஏராளமான டியூன்களை ரெடி பண்ணி கெளதம்மேனன், அஜீத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தவர், அவர்கள் ஓ.கே செய்த டியூன்களை இப்போது பாடலாக்கிக் கொண்டிருக்கிறார். ஏறகனவே மூன்று பாடல்களை ரெக்கார்ட்டிங் செய்து கொடுத்து விட்டார். அவற்றை படமாக்கியும் விட்டனர்.
அதனால் அடுத்தபடியாக மேலும் 3 பாடல்களை படமாக்கும் வேலைகளில் தற்போது இறங்கியிருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் அந்த பாடல்களை பதிவு செய்வதற்காக பிரான்ஸ் நாடு செல்கிறார். ஏழாம் அறிவு படத்துக்கு இசையமைத்த போது சீனாவில் உள்ள சில இசைக்கருவிகளை அப்படத்தில் பயன்படுத்திய ஹாரிஸ், இந்த படத்தில் பிரான்ஸ் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் சில இசைக்கருவிகளை இணைத்து வித்தியாசமான டோனை கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம்.