'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கன்னடத்தில், சூப்பர் ரங்கா படத்தில் நடித்தவர் கிரீத்தி கர்பந்தா. இப்படத்தின் வெற்றியால் பிரபலமானவர் இப்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் பெங்களூர் விமான நிலையத்தில், அதிகாரிகள் தன்னிடம் தவறாக நடக்க முயன்றாக பரபரப்பு குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, நான் பெங்களூர் விமான நிலையத்தில் நின்றிருந்தேன். அப்போது ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் என்னை நெருங்கி வந்தார், திடீரென என்னிடம் தவறாக நடக்க முற்பட்டார், அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார். இதை சில ஊழியர்களும் பார்த்து கொண்டு இருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை, இந்த சம்பவம் என் மனதை மிகவும் புண்படுத்திவிட்டது என்று கூறியிருக்கிறார். கிரீத்தியின் புகார், கன்னட சினிமாவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.