'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பெங்காலி நடிகை அங்கனாராய். தமிழில் வத்திக்குச்சி படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு சரியான வாய்ப்பு கிடைக்காமல் சிறிய இடைவெளிக்குப் பிறகு ரகளபுரம் படத்தில் நடித்தார். கபடம் என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்தார். மேகா என்ற படத்தில் சிறிய கேகரக்டரில் நடித்துள்ளார்.
அங்கனாராயை எல்லோரும் தென்னகத்து தீபிகா படுகோனே என்கிறார்கள். அவரும் தான் தீபிகா படுகோனே சாயலில் இருப்பதாக சொல்கிறார். அவர் மேலும் கூறியதாவது: தற்போது மகாபலிபுரம் படத்தில் நடித்து வருகிறேன். இதுவரை நடிக்காத ஒரு கேரக்டர். என் கேரியரில் முக்கியமானதாக இருக்கும். இதுதவிர கோப்ரா என்ற கன்னடப் படத்திலும், நா தேவுடு என்ற தெலுங்-கு படத்திலும் நடித்து வருகிறேன். மேலும் இரண்டு தமிழ் படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
நான் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் செட்டுகளில் நான் தீபிகா படுகோனே போன்று இருப்பதாக சொல்வார்கள். நான் அப்படிச் சொல்லிக் கொள்வதில்லை. என்றாலும் மற்றவர்கள் அப்படிச் சொல்லும்போது அதனை கிரடிட்டாக எடுத்துக் கொள்கிறேன். சந்தோஷமாகவும் இருக்கிறது. அழகில் அவரைப்போல இருக்கிறேனா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவரைப்போன்று சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது-. என்கிறார் அங்கனாராய்.