'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமன்னாவின் பெயரை வேண்டுமென்றே கெடுக்க சிலர் முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்த் திரையுலகில் சில வருடங்களுக்கு முன் அவரை வேண்டுமென்றே சிலர் படங்களில் ஒப்பந்தம் செய்யக் கூடாது என தடுத்து நிறுத்தியதாகவும் அவர்கள் சொல்கிறார்கள். 'கல்லூரி' படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரியான தமன்னா அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடித்தார். அதன் பின் திடீரென அவரைத் தமிழ்ப் படங்களில் பார்க்க முடியாமல் போய்விட்டது. தற்போது அதே போன்றதொரு சதிவலையை தெலுங்குத் திரையுலகிலும் பின்னியிருக்கிறார்களாம்.
தமன்னா மகேஷ்பாபுவுடன் ஜோடியாக நடித்து வெளிவந்த 'ஆகாடு' படம் தோல்வியடைந்ததற்குக் காரணம் அவருடைய ராசி என்று பரப்பியவர்கள் தற்போது, அந்தப் படத்தில் தமன்னா நடித்த காட்சிகள் சிலவற்றை குறைத்துவிட்டதால்தான் படத்தின் பிரமோஷனுக்கு தமன்னா வேண்டுமென்றே வரவில்லை என்று கூறி மகேஷ்பாபுவின் ரசிகர்களை உசுப்பி விடுகிறார்களாம். மகேஷ் பாபுவே அவருடைய படத்தின் பிரமோஷனுக்கு வராத நிலையில் தமன்னாவை வேண்டுமென்றே குற்றம் சுமத்துகிறார்கள். அவர் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் 'பாகுபலி' படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் தான் 'ஆகாடு' படத்தின் பிரமோஷனுக்கு அவர் வரவில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள்.
ஆக, 'ஆகாடு' படம் தமன்னாவுக்கு 'ஆகாத' படமாகிவிட்டது.