டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சித்தியுடன் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக சென்னையை காலி பண்ணி விட்டு சொந்த ஊரான ஆந்திராவுக்கே ஓட்டம் பிடித்தார் அஞ்சலி. அதனால் சேட்டை படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தவர், சிறிய இடைவேளைக்குப் பிறகு தற்போது ஜெயம்ரவியுடன் சுராஜ் இயக்கி வரும் படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இருப்பினும் தெலுங்கு, கன்னடத்தில் புதிய படங்கள் இருப்பதால் முன்பு மாதிரி சென்னையில் அவர் முகாம் போடவில்லை. ஆந்திராவில புதிய பங்களா வாங்கி அங்கேயே செட்டிலாகி விட்டார். தமிழ் படப்பிடிப்பு என்றால் தயாரிப்பாளர் செலவில் ஹோட்டலில் தங்கி விட்டு திரும்பி விடுகிறார்.
இந்த நேரத்தில், சமீபகாலமாக அஞ்சலிக்கு நிறைய மர்ம போன் கால்கள் வருகிறதாம். எதிர்முனையில் பேசுபவர் தவறான வார்த்தைகளை பிரயோகிக்கிறார்களாம். சில நேரங்களில் அவர்கள் பேசுவதே இல்லையாம். இப்படி அடிக்கடி நிகழ்கிறதாம். ஆனால் அந்த போன் நம்பர் யாருடையது என்று அஞ்சலிதரப்பில் சேர்ச் பண்ணினால் அது பப்ளிக் போனாக இருக்கிறதாம்.
இதன்காரணமாக, தற்போது தனது போன் நம்பரை ரகசியமாக வைத்திருக்கிறார் அஞ்சலி. சில முக்கியத்துவம் வாய்ந்த டைரக்டர், பட அதிபர்களிடம் மட்டுமே தன் நம்பரை கொடுத்திருப்பவர், வேறு யார் கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார்.