தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் சின்னத்திரைக்கு பேட்டி அளிப்பதோடு சரி. நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை. இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் முன்னணி வகிக்கும் சேனல் ஒன்று அவருக்கு பெருந் தொகை தருவதாக கூறியும் நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்க மறுத்தார்.
அவர் தற்போது மலையாள சேனல் ஒன்று நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு நடுவராக பணியாற்ற ஒப்புக் கொண்டிருக்கிறார். பேண்ட் இசை சம்பந்தமான இசை நிகழ்ச்சி. இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 பேண்டு குழுக்கள் இடையேயான போட்டிக்கு நடுவராக ஆண்ட்ரியா பணியாற்றுகிறார். அவருடன் டிரம்ஸ் சிவமணி, மலையாள இசை அமைப்பாளர் ஜார்ஜ் பீட்டர், தீபக் தேவ் ஆகியோரும் நடுவர்களாக இருக்கிறார்கள்.