ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவற்றில் சிறந்து பணியாற்றுகிறவர்களுக்கு எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் அறக்கட்டளை ஆண்டுதோறும் எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான விருது கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற அக்டோபர் மாதம் 12ந் தேதி நடக்கும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. வெள்ளி கேடயத்துடன் 2 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு கொண்டதாகும். வைரமுத்து 3 முறை தேசிய விருது பெற்றவர். சமீபத்தில் மலேசியாவில் மூன்றாம் உலகப் போர் நாவல் சிறந்த நாவலாக தேர்ந்தெடுக்கப்பட்டு 6 லட்சம் ரூபாய் வைரமுத்துக்கு பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.