ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவற்றில் சிறந்து பணியாற்றுகிறவர்களுக்கு எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் அறக்கட்டளை ஆண்டுதோறும் எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான விருது கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற அக்டோபர் மாதம் 12ந் தேதி நடக்கும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. வெள்ளி கேடயத்துடன் 2 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு கொண்டதாகும். வைரமுத்து 3 முறை தேசிய விருது பெற்றவர். சமீபத்தில் மலேசியாவில் மூன்றாம் உலகப் போர் நாவல் சிறந்த நாவலாக தேர்ந்தெடுக்கப்பட்டு 6 லட்சம் ரூபாய் வைரமுத்துக்கு பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.