டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கரண் நடித்த கருப்பசாமி குத்தகைக்காரர் படத்தில் தமிழுக்கு வந்த கோல்கட்டா அழகி மீனாட்சிக்கு கோலிவுட்டில் பெரிய அளவில் படங்கள் இல்லை என்றாலும், தமிழ், கன்னட சினிமாவிற்கு படையெடுத்த அவரை அங்குள்ள இயக்குனர்கள் கண்டுகொள்ளாததால், மீண்டும் மீண்டும் கோடம்பாக்கத்துக்கே வந்து கொண்டிருந்தார். அவரது தொடர் முயற்சி காரணமாக தற்போது வில்லங்கம் என்ற படத்தில் நந்தாவுடன் நடிக்கிறார். அதோடு, தனுஷ் நடிக்கும் சூதாடி படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிப்பவர், விக்ரம்பிரபுவின் வெள்ளக்காரதுரை படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடுகிறார்.
இதை பார்த்த சிலர், கதாநாயகியாக நடிக்கும்போது குத்துப்பாட்டுக்கு ஆடி எதற்காக மார்க்கெட்டை கெடுத்துக்கொள்ள வேண்டும்? என்றார்களாம். அதைக்கேட்ட மீனாட்சியோ, குத்துப்பாட்டுக்கு ஆடுவதால் மார்க்கெட்டுக்கு எந்த பங்கமும் வராது. சொல்லப்போனால் இன்றைக்கு மார்க்கெட்டில் இருக்கிற நடிகைகளுக்குத்தான் அயிட்டம் பாடல்களில் ஆடும் வாய்ப்பே கிடைக்கிறது. அந்த வகையில் இந்த வாய்ப்பு கிடைத்த பிறகுதான் மீண்டும் தமிழில் எனது மார்க்கெட் உயர்ந்திருப்பதாக அறிகிறேன் என்றாராம் மீனாட்சி.