'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
போபால் விஷ வாயு தாக்குதலை மையமாக வைத்து இந்தியில் உருவாகியுள்ள படம், ‛‛போபால் - ஏ பிரேயர் பார் ரெயின்''. ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படத்தை சஹாரா மூவிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் சந்தினி ராய் மற்றும் ரைசிங் ஸ்டார் என்டர்டெயின்மென்ட் சார்பில் ரவி வாலியா தயாரித்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர், போபால் கோர சம்பவத்தின் தாக்குதல் 30 ஆண்டுகளுக்கு பிறகும் தொடர்கிறது, இப்போது மக்கள் அதனால் கொல்லப்படுகின்றனர் என்ற வழுவான வாசகத்தோடு வெளியாகியுள்ளன.
இந்நிலையில் போபால் படம் கடந்த செப், 18-ம் தேதி அமெரிக்காவின், நியூயார்க் நகரில், மேன்ஹாட்டனில் உள்ள ப்ளோரன்ஸ் கவுல்ட் ஹாலில் திரையிடப்பட்டது. இந்தப்படத்தை ஹாலிவுட்டை சேர்ந்த சில பிரபலங்களும் பார்த்தனர். அவர்களோடு படத்தின் தயாரிப்பாளர்கள் சந்தினி ராய், ரவி வாலியா, மார்ட்டின் சீன், கல் பென், மிஷா பார்டன், தனிஷ்கா சாட்டர்ஜி, எழுத்தாளர் டேவிட் உள்ளிட்ட பலரும் பார்த்தனர். படத்தை பார்த்த ஹாலிவுட் பிரபலங்கள் அனைவரும் போபால் படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் வரலாற்றில் சொல்லப்படாத பல விஷயங்கள் இந்தப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது, இதனால் ரசிகர்கள் இந்தப்படத்தை மிகுந்த ஆர்வத்தோடு பார்த்தனர். மேலும் விஷ வாயு கசிவான போது, ரசிகர்கள் சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் அளவுக்கும், மிகவும் உணர்ச்சி வசத்தோடும் படத்தை ரசித்தனர். மேலும் படத்தை வெகுவாக பாராட்டவும் செய்தனர்.
இதுகுறித்து இப்படத்தில் நடித்துள்ள மார்ட்டின் சீன் கூறுகையில், இந்தப்படத்தில் நடிக்க என்னை கேட்டபோது, உடனே சம்மதம் சொன்னேன். மேலும் படத்தில் எனக்கான பொறுப்பு என்ன என்பதையும் உணர்ந்து உணர்வுப்பூர்வமாக நடித்தேன். போபால் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனாலும் அதன் துயரம் இன்றும் தொடர்கிறது என்று கூறியுள்ளார்.