'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வினய், சந்தானம் நடித்த அரண்மனை படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படத்தின் கதை ரஜினி நடித்த ஆயிரம் ஜென்மங்கள் படத்தை தழுவியது அதனால் படத்தை தடைசெய்ய வேண்டும் என்று ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் தயாரிப்பாளர் முத்துராமன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தநிலையில் அரண்மனை கதை என்னுடையது என்கிறார் மலையாள நடிகை செம்மீன் ஷீலா.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: 30 வருடங்களுக்கு முன்பு நான் இயக்கிய மலையாளப் படம் யக்ஷகானம். இது பேய் படம். பெரிய வெற்றி பெற்றது. அப்போது தமிழ்நாட்டில் எனது நெருங்கிய நண்பராக இருந்த மதிஒளி சண்முகம் பெரிய பணக் கஷ்டத்தில் இருந்தார். அவருக்கு உதவுவதற்காக இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை அவருக்கு கொடுத்தேன். துரை இயக்க ஆயிரம் ஜென்மங்கள் என்ற பெயரில் என் படத்தை ரீமேக் செய்தார்கள்.
ஆயிரம் ஜென்மங்கள் கதை என்னுடையது. இன்று அதற்கு பலர் உரிமை கொண்டாடுகிறார்கள். தற்போது வெளிவந்துள்ள அரண்மனை ஆயிரம் ஜென்மங்கள் கதை என்றால் அரண்மனை கதையும் என்னுடையதுதான். இதற்காக நான் அரண்மனை படத்துக்கு தடை கேட்கபோவதுமில்லை. எந்த உரிமையும் கொண்டாடப்போவதில்லை. நன்றாக ஓடுகிற படத்தை யார் தடுக்க முடியும்.
அதோடு ஒரு வீட்டுக்குள் நடக்கும் பேய்கதைகள் அனைத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அது தவிர்க்க முடியாது. அந்த கதையை எப்படி சொல்கிறோம் என்பதில்தான் வித்தியாசம் காட்ட முடியும். இதனால் கதை என்னுடையது, அவருடையது என்று உரிமை கொண்டாடுவதெல்லாம் தவறானதாகும் என்கிறார் ஷீலா.