‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நதிகள் நனைவதில்லை என்ற படத்தை இயக்கி வரும் நாஞ்சில் பி.சி.அன்பழகன், அடுத்து நட்சத்திர மழை என்ற படத்தை இயக்குகிறார். புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார் தலைமையில் தமிழக கவர்னர் ரோசையா படத்தை துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: இந்திய சினிமா பழமையானது. நாட்டு மக்கள் மத்தியில் சினிமா செல்வாக்கு மிகுந்ததாக இருக்கிறது. அப்படிப்பட்ட சக்தி மிகுந்த சாதனமான சினிமாவை சரியான முறையில் கையாள வேண்டும். ஒவ்வொரு படத்திலும் சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும்.
இந்த படம் மருத்துவர்களை மையமாக கொண்டிருக்கிறது. சின்ன சின்ன வியாதிகளுக்குகூட பெரிய டாக்டர்களிடம் சென்று அதிக செலவு செய்வது அதிகரித்துள்ளது. மருத்துவ வசதிகளும் பெருகி விட்டது, நோய்களும் பெருகிவிட்டது. சிகிச்சைக்கான செலவும் அதிகரித்துவிட்டது. அதைப் பற்றி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு கவர்னர் பேசினார்.
விழாவில் பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ், பாடகி வாணி ஜெயராம், விஞ்ஞானி சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்