டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமா சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் நடிகை அஞ்சலியின் கை எலும்பு முறிந்தது. கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்க அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறாவிட்டாலும் அஞ்சியின் மவுசு மட்டும் கூடியது. அங்காடித்தெரு படத்தில் நடித்ததன் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி விட்டார் அஞ்சலி. கனி என்ற கிராமத்து பெண் கேரக்டரால் ஆண்கள் மட்டுமல்ல... பெண்களையும் கவர்ந்த அஞ்சலி, இப்போது மகாராஜா, தம்பி வெட்டோத்தி சுந்தரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
மகாராஜா படத்தின் இறுதிகட்ட சூட்டிங் சென்னையில் நடந்தது. இதில் நடிகை அஞ்சலி கலந்து கொண்டு ஸ்கூட்டி ஓட்டும் காட்சியில் நடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்த அஞ்சலிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அலறித் துடித்த அஞ்சலியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அஞ்சலியை பரிசோதித்த டாக்டர்கள் கை எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து கைக்கு கட்டு போடப்பட்டது. தற்போது அஞ்சலி 15 நாள் ஓய்வில் இருக்கிறார்.