இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சினிமா சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் நடிகை அஞ்சலியின் கை எலும்பு முறிந்தது. கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்க அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறாவிட்டாலும் அஞ்சியின் மவுசு மட்டும் கூடியது. அங்காடித்தெரு படத்தில் நடித்ததன் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி விட்டார் அஞ்சலி. கனி என்ற கிராமத்து பெண் கேரக்டரால் ஆண்கள் மட்டுமல்ல... பெண்களையும் கவர்ந்த அஞ்சலி, இப்போது மகாராஜா, தம்பி வெட்டோத்தி சுந்தரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
மகாராஜா படத்தின் இறுதிகட்ட சூட்டிங் சென்னையில் நடந்தது. இதில் நடிகை அஞ்சலி கலந்து கொண்டு ஸ்கூட்டி ஓட்டும் காட்சியில் நடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்த அஞ்சலிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அலறித் துடித்த அஞ்சலியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அஞ்சலியை பரிசோதித்த டாக்டர்கள் கை எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து கைக்கு கட்டு போடப்பட்டது. தற்போது அஞ்சலி 15 நாள் ஓய்வில் இருக்கிறார்.