'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் |
உலகத்தையே உலுக்கிய துயர சம்பவம் 1984ம் ஆண்டு நடந்த போபால் விஷ வாயு. இந்தகோர சம்பவத்தில் 3800 பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் இந்த விஷவாயு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள. இன்றும் அதன் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போபால் விஷ வாயு சம்பவத்தை மையமாக வைத்து ''போபால் - ஏ பிரேயர் பார் ரெயின்'' என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. சகாரா மூவி ஸ்டூடியோஸ் மற்றும் ரைசிங் ஸ்டார் என்டர்டைமன்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில், மார்டின் ஷீன், கல் பென், ராஜ்பால் யாதவ், தன்னிஷ்தா சாட்டர்ஜி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த போபால் சம்பவத்தால், 30 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதும் மக்கள் சாகிறார்கள் என்று ஒரு அழுத்தமான மெஸ்சேஜ்ஜை இப்போஸ்டர் சொல்கிறது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் இப்படம் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.