கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
திரையுலகில் நடிகராகவோ, நடிகையாகவோ, இசையமைப்பாளராகவோ அல்லது இயக்குனராகவோ அறிமுகமாக காத்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சிலருக்கு அதிர்ஷ்டம் உடனே அமைந்து அவர்கள் முயற்சி எடுக்கும் போதே உடனே அறிமுகமாகி ஒரே படத்தில் உச்சத்தைத் தொட்டுவிடுவார்கள். ஆனால், சிலருக்கு பல வருடங்கள் காத்திருந்தாலும் அந்த வாய்ப்பு கிடைக்காமலே போய் விடும். இப்போது கூட பழைய படங்களைப் பார்க்கும் போதெல்லாம் அதில் உதவி இயக்குனர்கள் என்று குறிப்பிடப்படும் பெயரைக் கண்டிப்பாகப் படித்துப் பார்ப்பது வழக்கம், அவர்களில் பலர் இன்று வரை படங்களை இயக்காமலே காணாமல் போயிருப்பார்கள். இப்படி எவ்வளவோ பேரைப் பற்றிக் குறிப்பிடலாம்.
இன்று தமிழில் முன்னணி நடிகையாக தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் அசத்திக் கொண்டிருக்கும் அனுஷ்கா, அவருடைய அறிமுகத் திரைப்படத்தில் நடிப்பதற்காக 9 மாதங்கள் காத்திருந்தாராம். 2004ம் ஆண்டிலேயே நாகார்ஜுனா நடிக்க உள்ள தெலுங்குப் படம் ஒன்றில் நடிப்பதற்காக ஆடிஷனில் கலந்து கொண்டாராம். தோழிகள் ஊக்கம் கொடுத்ததால்தான் அதில் கலந்து கொள்ளவும் சம்மதித்துள்ளார். அந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், அவர் முதன் முதலாக காமிரா முன் நின்று நடித்தது 2005ம் ஆண்டில்தானாம். வாய்ப்பு கிடைத்ததற்கும் காமிரா முன் நின்று நடித்ததற்கும் அவருக்கு 9 மாதங்களுக்கு மேல் ஆனதாம்.
அந்த இடைப்பட்ட காலத்தில் அவர் உதவி இயக்குனராக வேலை பார்த்திருப்பார் என மற்றவர்கள் நினைத்துக் கொண்டார்களாம். ஆனாலும், அவருடைய தோழிகள்தான் அனுஷ்கா முதல் காட்சியில் எப்படி நடிக்கப் போகிறாரோ என்று மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களாம். முதல் காட்சியில் நடித்த பின் தனக்கிருந்த பயம் அனைத்தும் போய்விட்டது என்கிறார் அனுஷ்கா.