தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள் என்று டைரக்டர் தங்கர்பச்சான் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். புதுமுகங்கள் ஹரிஸ் கல்யாண் - உத்ரா ஜோடியாக நடிக்க, டைரக்டர் ஷங்கரிடம் உதவி டைரக்டராக இருந்த கே.ஆர்.மதிவாணன் இயக்கியிருக்கும் படம், அரிது அரிது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் டைரக்டர் ஷங்கர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார். நிகழ்ச்சியில் டைரக்டர் தங்கர்பச்சார் கலந்து கொண்டு பேசியதாவது:-
சினிமாவில் தயாரிப்பாளர்கள் இல்லையென்றால், யாருக்கும் வேலை இருக்காது. ஆனால் அந்த தயாரிப்பாளர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களில், 99 சதவீதம் பேர் கடனிலும், கஷ்டத்திலும் மாட்டிக்கொள்கிறார்கள். ஒரு சதவீதம் பேர்தான் தப்பி வருகிறார்கள். தயாரிப்பாளர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். அவர்கள் அறிமுகம் செய்தவர்கள் படத்துக்கு படம் அதிக ஊதியமும், பெயரும், புகழும் வாங்கிக்கொண்டே போகிறார்கள். எந்தவித திட்டமிடுதலும் இல்லாமல் சிலர் படம் தயாரிக்க வந்துவிடுகிறார்கள். எனவே தயாரிப்பாளர்களுக்கு, `கவுன்சிலிங்' வேண்டும். அதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்யவேண்டும். ``இங்கே ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள்'' என்று படம் தொடங்குவதற்கு முன்பே தயாரிப்பாளர்களுக்கு எச்சரிக்கை செய்யவேண்டும். ரொம்ப கடுமையாக உழைப்பவர்கள் எல்லாம் சினிமாவில் எடுபட மாட்டார்கள். நிறைய வியர்வை சிந்தி உழைத்தவர்கள் எல்லாம் சினிமாவில் காணாமல் போயிருக்கிறார்கள்.
கலைக்குள் அரசியல் நுழைந்ததால், சினிமா குளறுபடியாகி விட்டது. சிக்கல்களையும், சீரழிவுகளையும் சந்தித்து வருகிறோம். வெளியில் சொல்ல முடியாமல், நிறைய தயாரிப்பாளர்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய செய்தி. எல்லா படங்களுக்கும் தியேட்டர்களில் ஒரே கட்டணம் வசூலிப்பதால், யாரும் தியேட்டர்களுக்கு வருவதில்லை. இதற்கு யாரையும் குறை சொல்லக்கூடாது. குற்றவாளிகள் நாம்தான். தியேட்டர்களில் கட்டணத்தை குறைக்காத வரை சினிமா முன்னேறாது. ரூ.50 கோடியில் தயாராகும் படத்துக்கும் அதே கட்டணம். ஒரு கோடியில் தயாராகும் படத்துக்கும் அதே கட்டணம் என்றால், எப்படி தியேட்டர்களுக்கு வருவார்கள்? இந்த நிலை மாற, நடிகர்கள் முகத்தில் பணம் கட்டுவதை குறைக்க வேண்டும். படைப்பாளிகளின் கையில் திரைப்பட துறை வரவேண்டும்.
இவ்வாறு தங்கர்பச்சான் பேசினார்.
தங்கர்பச்சானின் இந்த ஆவேச பேச்சுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் அதே மேடையிலேயே கண்டனம் தெரிவித்தார். அவர் பேசுகையில், `சினிமாவில் ஜெயித்தவர்கள் தொடர்ந்து ஜெயிப்பதற்கு போராடுகிறார்கள். இதில், உங்களை மாதிரி ஆட்கள், என்னை மாதிரி ஆட்கள் வழிவிட தயாராக இருக்கிறோமா? தங்கர்பச்சான், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு வருவதே இல்லை. அங்கு வராமல், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் என்ன நடக்கிறது? என்பது தெரியாமல் பேசக்கூடாது.'' என்றார்.
அடுத்து பேசவந்த தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், இரண்டு பேரையும் சமாதானம் செய்வது போல் பேசினார். `இந்த விழா மேடை, கருத்தரங்க மேடையாகி விட்டது. தயாரிப்பாளர்களின் நலனுக்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் போராடி வருகிறது. எத்தனையோ பிரச்சினைகளை தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்த்து வைத்து இருக்கிறது. தொடர்ந்து தயாரிப்பாளர்களின் நலனுக்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்து பாடுபடும்'' என்று அவர் கூறினார்.