Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவில் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள்! தங்கர்பச்சான் பளீச் பேச்சு!!

13 ஜூன், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

சினிமாவில் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள் என்று டைரக்டர் தங்கர்பச்சான் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். புதுமுகங்கள் ஹரிஸ் கல்யாண் - உத்ரா ஜோடியாக நடிக்க, டைரக்டர் ஷங்கரிடம் உதவி டைரக்டராக இருந்த கே.ஆர்.மதிவாணன் இயக்கியிருக்கும் படம், அரிது அரிது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் டைரக்டர் ஷங்கர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார். நிகழ்ச்சியில் டைரக்டர் தங்கர்பச்சார் ‌கலந்து கொண்டு பேசியதாவது:-

சினிமாவில் தயாரிப்பாளர்கள் இல்லையென்றால், யாருக்கும் வேலை இருக்காது. ஆனால் அந்த தயாரிப்பாளர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களில், 99 சதவீதம் பேர் கடனிலும், கஷ்டத்திலும் மாட்டிக்கொள்கிறார்கள். ஒரு சதவீதம் பேர்தான் தப்பி வருகிறார்கள். தயாரிப்பாளர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். அவர்கள் அறிமுகம் செய்தவர்கள் படத்துக்கு படம் அதிக ஊதியமும், பெயரும், புகழும் வாங்கிக்கொண்டே போகிறார்கள். எந்தவித திட்டமிடுதலும் இல்லாமல் சிலர் படம் தயாரிக்க வந்துவிடுகிறார்கள். எனவே தயாரிப்பாளர்களுக்கு, `கவுன்சிலிங்' வேண்டும். அதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்யவேண்டும். ``இங்கே ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள்'' என்று படம் தொடங்குவதற்கு முன்பே தயாரிப்பாளர்களுக்கு எச்சரிக்கை செய்யவேண்டும். ரொம்ப கடுமையாக உழைப்பவர்கள் எல்லாம் சினிமாவில் எடுபட மாட்டார்கள். நிறைய வியர்வை சிந்தி உழைத்தவர்கள் எல்லாம் சினிமாவில் காணாமல் போயிருக்கிறார்கள்.

கலைக்குள் அரசியல் நுழைந்ததால், சினிமா குளறுபடியாகி விட்டது. சிக்கல்களையும், சீரழிவுகளையும் சந்தித்து வருகிறோம். வெளியில் சொல்ல முடியாமல், நிறைய தயாரிப்பாளர்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய செய்தி. எல்லா படங்களுக்கும் தியேட்டர்களில் ஒரே கட்டணம் வசூலிப்பதால், யாரும் தியேட்டர்களுக்கு வருவதில்லை. இதற்கு யாரையும் குறை சொல்லக்கூடாது. குற்றவாளிகள் நாம்தான். தியேட்டர்களில் கட்டணத்தை குறைக்காத வரை சினிமா முன்னேறாது. ரூ.50 கோடியில் தயாராகும் படத்துக்கும் அதே கட்டணம். ஒரு கோடியில் தயாராகும் படத்துக்கும் அதே கட்டணம் என்றால், எப்படி தியேட்டர்களுக்கு வருவார்கள்? இந்த நிலை மாற, நடிகர்கள் முகத்தில் பணம் கட்டுவதை குறைக்க வேண்டும். படைப்பாளிகளின் கையில் திரைப்பட துறை வரவேண்டும்.

இவ்வாறு தங்கர்பச்சான் பேசினார்.

தங்கர்பச்சானின் இந்த ஆவேச பேச்சுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் அதே மேடையிலேயே கண்டனம் தெரிவித்தார். அவர் பேசுகையில், `சினிமாவில் ஜெயித்தவர்கள் தொடர்ந்து ஜெயிப்பதற்கு போராடுகிறார்கள். இதில், உங்களை மாதிரி ஆட்கள், என்னை மாதிரி ஆட்கள் வழிவிட தயாராக இருக்கிறோமா? தங்கர்பச்சான், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு வருவதே இல்லை. அங்கு வராமல், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் என்ன நடக்கிறது? என்பது தெரியாமல் பேசக்கூடாது.'' என்றார்.

அடுத்து பேசவந்த தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், இரண்டு பேரையும் சமாதானம் செய்வது போல் பேசினார். `இந்த விழா மேடை, கருத்தரங்க மேடையாகி விட்டது. தயாரிப்பாளர்களின் நலனுக்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் போராடி வருகிறது. எத்தனையோ பிரச்சினைகளை தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்த்து வைத்து இருக்கிறது. தொடர்ந்து தயாரிப்பாளர்களின் நலனுக்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்து பாடுபடும்'' என்று அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

வாய்க்கால் வனராசா - kapilnagar,இந்தியா
18 அக், 2012 - 12:31 Report Abuse
 வாய்க்கால் வனராசா தங்கர் கருத்து சரியோ தப்போ நாகரீகமாக சபை நடுவே முன் வைத்துள்ளார். பகிரங்க பக்கத்தில் ஒருவரை மனநோயாளி என்றும் பித்தன் என்றும் அழைப்பது அநாகரீகம் என்பதை தெரியபடுத்தி தங்களை ஒரு சரியான ஆலோசகரிடம் சென்று பண்பு என்றால் என்ன எதிர் கருத்தை எப்படி கையாள வேண்டும் என்று கற்று கொள்ளும்படி சிபாரிசு செய்கிறேன்.
Rate this:
பாலா - elanjavur singapore,இந்தியா
23 நவ, 2010 - 13:37 Report Abuse
 பாலா தங்கர் சொல்வது சரியே. தியேட்டரில் கட்டணம் குறையாமல் இருக்கும் வரை திருட்டு வி சி டி யும் குறையாது.
Rate this:
sivakumar - thanjavur,இந்தியா
20 ஜூன், 2010 - 11:58 Report Abuse
 sivakumar தங்கர் பச்சான் ஒரு மன நோயாளி வாயில் வந்ததை பேசும் பித்தன் அவருக்கு ஒரு கவுன்சிலிங் வைத்தல் நல்லது.
Rate this:
murugan - singapore,இந்தியா
16 ஜூன், 2010 - 10:27 Report Abuse
 murugan தங்கர்பச்சன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. உண்மையை தவிர வேறொன்றும் இல்லை. அவர் சொன்ன கருத்து அறிவாளிகளுக்குதான் புரியும்
Rate this:
sanjay - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
15 ஜூன், 2010 - 15:22 Report Abuse
 sanjay திரு.தங்கர்....சொல்வது.. உண்மைதான்...
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in