கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
மலையாளத் திரையுலகின் சிறந்த எழுத்தாளரும், இயக்குனருமான அடூர் கோபால கிருஷ்ணன் கேரளாவில் சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருந்த சினிமா தொடர்பான கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசிய போது இன்றைய சினிமாவின் நிலை குறித்து மிகவும் வருத்தம் தெரிவித்துப் பேசியுள்ளார்.
“திரைப்படத் தயாரிப்புச் செலவு என்பது தற்போது விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. கருப்புப் பணம் வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும்தான் இப்போதெல்லாம் படம் தயாரிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஒரு சாதாரண தயாரிப்பாளர் இப்போது படம் தயாரித்தால் அவர் நிச்சயம் மோசமான நிலையைச் சந்தித்து ஊரைச் சுற்றி வரும் நிலைக்குத் தள்ளப்படுவார். உண்மையிலேயே அதிக அக்கறையுடன் ஒருவர் திரைப்படம் இயக்க வரும் போதுதான் நல்ல திரைப்படம் பிறக்கிறது. இன்றைய நிலையில் திரைப்படத் தயாரிப்பில் விரும்பத்தகாத விஷயங்கள்தான் அதிகம் நடக்கிறது.
ஒரு திரைப்படத்தில் புகை பிடித்தல், மது அருந்துதல் குறித்த எச்சரிக்கை வாசகங்களை அந்த காட்சிகள் வரும் போது சேர்க்காமல் படம் ஆரம்பிக்கும் முன்போ, இடைவேளையின் போதோ காட்டுவதுதான் சரியாக இருக்கும், ” என்று அவருடைய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.