ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தலைப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டு விடாதீர்கள், ஏற்கெனவே உலகம் முழுவதும் 20000 திரையரங்குகளில் படத்தை வெளியிட உள்ளோம் என்று சொன்ன படத்தின் தயாரிப்பாளர்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகையைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். ஐ படத்தின் டீஸர், சில காட்சிகள் ஆகியவற்றை ஹாலிவுட் நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் கம்பெனிக்கு போட்டுக் காட்டினாராம். அவற்றைப் பார்த்து அவர்கள் மிரண்டு போனார்களாம். அவர்களைப் போன்ற ஒரு பிரபலமான நிறுவனம் ஐ படத்தை உலகம் முழுவதும் வெளியிட்டால் 5000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிக்கும் தகுதி ஐ படத்திற்கு உண்டு என்கிறார்.
இந்தியத் திரையுலகம் ஐ படத்திற்கு முன், ஐ படத்திற்குப் பின் என பிரிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். “இந்தப் படத்திற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உழைத்திருக்கிறார்கள். உலகமே இந்திய சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைக்கும், இயக்குனர் ஷங்கரை இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என்று சொல்வார்கள். ஒவ்வொருவரும் குடும்பத்துடன் படத்தைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். இப்போதே அறுபது சதவீதத்திற்கும் மேலானவர்களை இந்தப் படம் சென்றடைந்துவிட்டது. அவர்கள் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்கள், ஆந்திராவிலும் இதே நிலைமைதான்.
ஐ படத்தை உலகில் உள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறோம், அதற்கான வலிமை படத்திற்கு உண்டு. ஷங்கர் மற்றும் அவரது குழுவினரின் இந்த முயற்சிகளுக்கு நாங்கள் பெருமைப்படுகிறோம்,” என்று படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.