ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாணா காத்தாடி சமந்தா தெலுங்கு சினிமாவில்தான் அறிமுகமானார். அங்கு அவர் நடித்த படங்களெல்லாம் ஹிட்டாக அமைந்ததால் அத்தனை முன்னணி ஹீரோயினிகளையும் ஓவர்டேக் செய்து விட்டு நம்பர் ஒன் நாற்காலியிலும் அமர்ந்தார். அந்த நேரத்தில்தான், தமிழில் மணிரத்னம் இயக்கிய கடல், ஷங்கர் இயக்கிய ஐ படங்களில் நடிக்க சமந்தாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், அவரது துரதிர்ஷ்டம் கடல் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது தோல் அலர்ஜி நோய் தாக்கியது. அதனால் அந்த படத்திலிருந்தே வெளியேறிய சமந்தா, சிகிச்சையில் இறங்கினார். அதன் காரணமாக, ஷங்கருக்கும் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டது. அதனால் எமிஜாக்சனை புக் பண்ணி படப்பிடிப்பை தொடங்கினார்.
இதனால் சமந்தாவுக்கு பெரிய அதிர்ச்சியாகி விட்டது. இருப்பினும், எப்படியாவது தெலுங்கைப் போலவே தமிழிலும் முன்னணி இடத்தை பிடிப்பேன் எனறு மனதில வைராக்கியம் கொண்டவர், அஞ்சான், கத்தி படங்களில் கமிட்டானார். இதில் அஞ்சான் சமந்தாவை ஏமாற்றி விட்டது. இருப்பினும், தற்போது விஜய்யின் கத்தி படத்தை அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், கத்தி ஹிட்டடித்து தமிழ் சினிமாவிலும் தெலுங்கைப் போலவே தன்னை நம்பிக்கை நாயகியாக்கும் என்று எதிர்பார்க்கும் சமந்தா, இதே வேகத்தில் டைரக்டர் ஷங்கரை சந்தித்து, அடுத்து அவர் இயக்கும் படத்தில் நடிப்பதற்கான முயற்சியிலும் இறங்கப் போகிறாராம்.