தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் மிக திறமை வாய்ந்த நடிகராக வலம் வந்த அக்ஷை கண்ணா நீண்ட இடைவெளிக்கு பிறகு தேவ் பெனிகல் இயக்கும் பாம்பே சாமுராய் படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்கு நடிக்க வந்துள்ளார். இந்த படத்தில் அக்ஷையுடன் கரீனா கபூரும் ஃபரான் அக்தரும் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் மாறுபட்ட வேடத்தில் அக்ஷை நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், அந்த படத்தின் கதையில் நிறைய மாறுதல்கள் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் மற்றும் டைரக்டரிடம் அக்ஷை கூறி உள்ளாராம். கதையில் அக்ஷையின் தலையீடு அதிகம் உள்ளதால் பட நிறுவனம் அவர் மீது அதிருப்தியில் உள்ளதாம். நீண்ட நாட்களுக்கு பின் நடிக்க வந்திருக்கும் அக்ஷையிடம் இந்த ஒரு படம் தான் கைவசம் உள்ளதாம். இருந்தாலும் கதையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தொடர்ந்து பட அதிபர்களிடம் அக்ஷை பேசி வருகிறாராம். இதனால் இப்படத்தை அவரை மாற்றி விட்டு அவருக்கு பதிலாக இர்பானை புக் செய்ய பட நிறுவனம் பரிசீலித்து வருகிறதாம்.