பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படம் குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
பாலிவுட்டின் மிக திறமை வாய்ந்த நடிகராக வலம் வந்த அக்ஷை கண்ணா நீண்ட இடைவெளிக்கு பிறகு தேவ் பெனிகல் இயக்கும் பாம்பே சாமுராய் படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்கு நடிக்க வந்துள்ளார். இந்த படத்தில் அக்ஷையுடன் கரீனா கபூரும் ஃபரான் அக்தரும் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் மாறுபட்ட வேடத்தில் அக்ஷை நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், அந்த படத்தின் கதையில் நிறைய மாறுதல்கள் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் மற்றும் டைரக்டரிடம் அக்ஷை கூறி உள்ளாராம். கதையில் அக்ஷையின் தலையீடு அதிகம் உள்ளதால் பட நிறுவனம் அவர் மீது அதிருப்தியில் உள்ளதாம். நீண்ட நாட்களுக்கு பின் நடிக்க வந்திருக்கும் அக்ஷையிடம் இந்த ஒரு படம் தான் கைவசம் உள்ளதாம். இருந்தாலும் கதையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தொடர்ந்து பட அதிபர்களிடம் அக்ஷை பேசி வருகிறாராம். இதனால் இப்படத்தை அவரை மாற்றி விட்டு அவருக்கு பதிலாக இர்பானை புக் செய்ய பட நிறுவனம் பரிசீலித்து வருகிறதாம்.