'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
தடகள வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை பற்றிய படமான மேரி கோம், பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மற்றொரு நிஜ பிரபலத்தின் வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார் பிரியங்கா சோப்ரா. ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான கிரண் பேடியின் வேடத்தில் தான் பிரியங்கா நடிக்க போகிறாராம்.
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி என்ற பெருமையை பெற்று, புகழ்பெற்றவராக விளங்கும் கிரண் பேடி, 2007ம் ஆண்டு ஓய்வுபெற்றார். பின்னர் சில டிவி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தவர், அன்னா ஹசாரேவின் லோக்பால் பிரசாரத்திலும் முக்கிய பங்கு வகித்தார்.
கிரண் பேடியாக பிரியங்கா நடிக்க உள்ளதை அவரது செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். மேலும் இது பற்றிய பேச்சு வெகு நாட்களுக்கு முன்னரே துவங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், கிரண் பேடி வேடத்தில் நடிப்பதற்கு பிரியங்காவிற்கு சம்பளமாக ரூ.10 கோடி தருவதாக கூறப்பட்டதாகவும், அந்த கதை தனக்கு பிடித்திருந்தால் மட்டுமே அதில் நடிப்பது பற்றி தான் முடிவு செய்வதாகவும் பிரியங்கா கூறி விட்டதாகவும் பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
லக் மற்றும் கால் படங்களை இயக்கிய சோஷம் ஷா தான் இந்த படத்தையும் இயக்க உள்ளாராம். இந்த படம் பற்றி கேட்க கிரண் பேடியை அனுகிய போது, முதலில் ஆச்சர்யப்பட்ட அவர் அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறி விட்டார்.