டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா. அதன் பிறகு சின்னத்திரை பக்கம் வந்தார். மெட்டிஒலி, கோலங்கள், தென்றல், செல்லமே உள்பட பல சீரியல்களில் நடித்தார். மீண்டும் சினிமாவுக்கு திரும்பினார். அக்கா, அண்ணி வேடங்கள்தான் கிடைத்தது. இதனால் வெறுத்துப்போனவர் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி வாணி ராணியிலும், மகாபாரதத்திலும் நடித்து வருகிறார்.
இதுவரை நடிகையாக இருந்த நீலிமா தற்போது அழகிய சினேகிதி என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாகியிருக்கிறார். இது பெண்களுக்கான நிகழ்ச்சி, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டு வந்து அழகிய சினேகிதியாக வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி.
"தொகுப்பாளினியாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. பல வாய்ப்புகள் வந்தபோதும் எனக்குள் இருந்த தயக்கத்தால் ஏற்கவில்லை. இப்போது துணிச்சலுடன் களம் இறங்கிவிட்டேன். இதை சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்கிறார் நீலிமா.