'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு |
உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடிக்கும் நண்பேன்டா என்ற படத்தின் படப்பிடிப்பு விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூந்துறையில் நடந்து வருகிறது. உதயநிதியும், காமெடி நடிகர் சந்தானமும் சிறையில் இருந்து தப்பி செல்வது போன்ற காட்சியை படமாக்க. ஆர்ட் டைரக்டரின் பணியாட்கள் கடந்த சில நாட்களா ஷெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த பணிக்காக ராட்சத கிரேன் ஒன்று பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. நேற்று (செப் 21) வேலை நடந்து கொண்டிருந்தபோது திடீரென கிரேன் சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அருணகிரி, ரமேஷ், சதீஷ், மூர்த்தி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளை (செப் 22) முதல் அங்கு நடைபெறுவதாக இருந்த நண்பேண்டா படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.