ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வினய், சந்தானம் நடித்துள்ள படம் அரண்மனை. கடந்த 19ந் தேதி ரிலீசானது. தற்போது இந்தப் படத்துக்கு தடைகேட்டு 12வது சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் இயக்குனர் எம்.முத்துராமன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது: நான் 35 ஆண்டுகளாக தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் உள்ளேன். 27 படங்களை தயாரித்திருக்கிறேன். அதில் ஒன்று 1978ம் ஆண்டு தயாரித்த ஆயிரம் ஜென்மங்கள் என்ற படம். இதில் ரஜினிகாந்த், விஜயகுமார், லதா நடித்திருந்தனர். வெற்றி பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுக்க திட்டமிட்டிருந்தேன். இதனை இயக்க செல்வா என்ற இயக்குனருக்கு அட்வான்சும் கொடுத்திருந்தேன்.
தற்போது வெளிவந்திருக்கும் அரண்மனை படத்தின் கதை நாங்கள் தயார் செய்து வைத்திருந்த ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் இரண்டாம் பாக கதையாகும். இதனை விஷன் ஐ மீடியா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. எனவே இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் விஷன் ஐ மீடியா நிறுவனம், இயக்குனர் சுந்தர்.சி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.