பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
முன்பெல்லாம் ஒரு படம் 50 நாளை தாண்டி ஓடினால் அதனை வெற்றிப் படம் என்பார்கள். 100 நாளை கடந்தால்தான் வெற்றி விழா கொண்டாடுவார்கள். இப்போது வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாளை கடந்து விட்டால் நான்காவது நாள் திங்கள் கிழமை நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி வைத்து வெற்றி விழாவை கொண்டாடிவிடுகிறார்கள்.
இவற்றையெல்லாம் மிஞ்சுகிற அளவுக்கு அரண்மணை டீம் படம் வெளியான அன்றே வெற்றி விழா கொண்டாடி புதுமை படைத்திருக்கிறது. சுந்தர்.சி இயக்கத்தில் விநய், ஹன்சிகா, ஆண்டரியா, ராய் லட்சுமி நடித்த அரண்மணை படம் செப்டம்பர் 19 ரிலீசானது. முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. திரையிட்ட எல்லா தியேட்டர்களிலும் ஹவுஸ்புல்தான். சுந்தர்.சியின் முந்தைய வெற்றிப் படங்களான கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் எதிர்பார்ப்பில் இந்த ஓப்பனிங் கிடைத்திருக்கலாம். திங்கட்கிழமை தாண்டியும் இதே வரவேற்பு இருந்தால் படம் தாக்குப்பிடிக்கும்.
ஆனால் முதல்நாளே வெற்றியை கொண்டாடிவிட்டார்கள். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா மோத்வானி நடிக்கும் ஆம்பள படத்தின் படப்பிடிப்பில் இந்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினார்கள். இதில் சுந்தர்.சி, விஷால், ஹன்சிகா மோத்வானி, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, காமெடி நடிகர் சதீஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.