தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் அர்ஜுன் தற்போது அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2 படத்தைத் தயாரித்து, இயக்கி, நாயகனாகவும் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் இந்தப் படம் வெளிவர உள்ளது. இதனிடையே தெலுங்கின் பிரபல இயக்குனரான த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்தக் கதாபாத்திரத்தில் தற்போது கன்னட நடிகரான உபேந்திரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கன்னடத் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் உள்ள உபேந்திரா பல வெற்றிப் படங்களை இயக்கி, நாயகனாக நடித்தும் உள்ளார். தற்போது கன்னடத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு உபேந்திரா தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் விஷால், நயன்தாரா நடித்து வெளிவந்த 'சத்யம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கும் புதிய படத்தில் அல்லு அர்ஜுனுடன் நடிக்க சமந்தா, அடா சர்மா ஒப்பந்தமாகியுள்ளனர். சினேகாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்திற்குப் பிறகு த்ரிவிக்ரம் இயக்க உள்ள இந்தப் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.